பலாத்காரம் செய்து கொலை செய்து சிறுமி பாத்திரத்தில் மூடி வைப்பு !

இந்தியாவின் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த சம்பவத்தினால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
பலாத்காரம் செய்து கொலை செய்து சிறுமி பாத்திரத்தில் மூடி வைப்பு !
மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்த தெலுங்கனூரைச் சேர்ந்தவர் ராஜா (38). இவரின் பெண் குழந்தைகள் ஜோதிகா (8), தர்ஷினி (6). சனிக்கிழமை மாலை தர்ஷினி 

தனது தந்தையுடன் கடைக்குச் சென்று இனிப்பு பண்டங்கள் வாங்கி விட்டு அருகில் உள்ள திருமூர்த்தி (17) என்பவரின் வீட்டின் வழியாகச் சென்றவர், வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.

இதையடுத்து சிறுமி தர்ஷினியை பல்வேறு இடங்களில் ராஜா மற்றும் அவரது உறவினர்கள் தேடினர். 

சந்தேகமடைந்து திருமூர்த்தியிடம் விசாரித்த போது தனக்கு சிறுமியைப் பற்றி ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை கிராம மக்கள் திருமூர்த்தி மீது கொளத்தூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாடின் பெயரில் திருமூர்த்தி வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டில் பூஜை அறையில் குங்குமம் சிதறிக் கிடந்தது. 

மேலும், வீட்டில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பெரிய அலுமினியப் பாத்திரத்தில் தர்ஷினியின் உடல் மூடி வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருமூர்த்தியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் கூறியதாவது,

நேற்று முன்தினம் மாலை, 5 மணியளவில், சிறுமி தர்ஷிணி, திருமூர்த்தி வீடு வழியாக சென்றாள். அப்போது, பிஸ்கட் தருவதாக கூறி, வீட்டுக்குள் அழைத்து சென்றேன். 

பின், தொலைக்காட்சியை மிக சத்தமாக வைத்துவிட்டு, பூஜை அறையில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்தேன். இதனால், சிறுமியின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. 

மயங்கிய சிறுமியை வெளியில் தூக்கி செல்ல திட்டமிட்டேன். ஆனால், வெளியில் இரவு முழுவதும் ஊர் மக்கள், சிறுமியை தேடிக் கொண்டிருந்தனர்.
அதனால், வெளியில் தூக்கி சென்றால் மாட்டி கொள்வோம் என நினைத்து, வீட்டினுள் குழி தோண்டி புதைக்க, முடிவு செய்துள்ளான். 

சிறிது குழி தோண்டிய நிலையில், அது முடியாததால், புதைக்கும் திட்டத்தை கை விட்டான்.
பலாத்காரம் செய்து கொலை செய்து சிறுமி பாத்திரத்தில் மூடி வைப்பு !
பின், சிறுமிக்கு மயக்கம் தெளிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அவளது கன்னத்தில் இருந்து வயிறு வரை பிளேடால் கீறி, 

கொடுரமாக கொலை செய்து, பூஜை அறையில் இருந்த பாத்திரத்தில் போட்டு மூடி விட்டேன். நேற்று காலை, தாத்தா ராமன் பூஜை அறையை சுத்தம் செய்ய சென்றார். 

அப்போது, தாத்தாவை உள்ளே அனுமதிக்காமல் திருமூர்த்தி தடுத்தான். 

இதை அறிந்து சந்தேகம் அடைந்த ராமன், உள்ளே நுழைந்து சிறுமி உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கி யுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி சேலம் அரசு வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர். மேலும், 

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings