இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?





இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

0
வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தேவை. அது வெயிலின் வெப்பத்தைத் தனிக்கக் கூடிய இயற்கை நீர். வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. 
இளநீரின் மருத்துவக் குணம் அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் தான் சரியான உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி ராஜ். 

இவர் வூட்டு நியூட்ரீஷியன் கிளீனிக்கின் நிறுவனர் மற்றும் மருத்துவராக இருக்கிறார். இளநீரை தினமும் அருந்துவதால் ஆபத்து என்பதெல்லாம் உண்மை கிடையாது என்று பிரீத்தி ஒரு ஆய்வையும் மேற்கோள் காட்டுகிறார். 
அதில் தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடைக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் உடலுக்கு மிக முக்கியமான இன்சுலினை தூண்டி வேலை செய்ய வைக்கிறது. 

அதை தூண்டுவதற்கான ஊட்டச்சத்து இளநீரில் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிசம் இளநீர். சுத்தமான சுவையான பானம். 

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. 

அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

சீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். சீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தை களுக்கு இளநீர் நல்ல மருந்து.

உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக் குறையை இளநீர் சரி செய்கிறது. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளி களுக்கு நல்ல சத்து.
முற்றிலும் குணமாகக் கூடியதா ஆட்டிசம்?
ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளி களுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவம் (plasma) சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப் படுகிறது.
விந்துவை அதிகரிக்கும் இளநீர்
ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன் படுகிறது. இளநீரி லிருந்து தயாரிக்கப்படும் அரைத் திண்மக் கரைசல் (gel) என்ற பொருள் கண் நோய் களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந் துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
கண்களில் தொடர்ந்து நீர் வடிவதற்கான காரணங்கள் என்ன?
இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணை யானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)